Subscribe Us

header ads

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் நன்மைகள்

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் நன்மைகள்
பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க பிறக்க‍ச்
செய்யும் வழி தான் உறவு கொள்வது. இந்த உறவு கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்ள வேண்டும் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா? வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின்மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகி றதாம்.
இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவ த்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ளவேண்டும். முன்பு உறவுகொண்ட மாதிரி முரட்டு த்தனமாக இருக்கக் கூடாது.

பெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சி வயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்
கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுகொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.
எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
எச்சரிக்கை –

மேற்படி கட்டுரையானது பொதுவானது. கருத்தரித்திருக்கும் பெண்களே… உறவு கொள்வது குறித்து கண்டிப்பாக உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை க்கேட்டு அதன்படி நடப்பதே தாய்க்கும் சேய்க்கும் நல்ல‍து.

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொ ண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண் டும். அதாவது பிரச வம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசே ரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண் ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங் களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண் களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கண க்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்ப  தாக மருத்துவர் உத்தரவா தம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பா தையில் காயங்கள் ஏற்பட் டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவ னுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரி யாகி விட்ட போதிலும், அவளு க்கு உறவில் விருப்பமில்லை எ ன்று தெரிந்தால், அதற்குக் கட்டா யப்படுத்துவது கூ டாது.

* உறவில் ஈடுபடும் போது உடலு றவுப் பாதையில் கடுமை யான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

* கருச்சிதைவுக்குள்ளானவர்களு ம், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே யே உறவைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்கா து என்று பலரும் அந்நாளில் உற வு கொள்ள நினைப்ப துண்டு. ஆ னால் அதை முழுமையாக நம்பு வதற்கில்லை. அந் நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கண வன் -மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய் ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந் தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போ து உறவில் ஈடுபட்டால் தாய் ப்பால் இல்லாமல் போய் வி டும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கை யே. குழந்தை பிறந்து, குறுகி ய காலத்திலேயே உறவு கொ ண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலே யே அதைத் தவிர்க்கச் சொல் கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண் டாம். ஏதாவதொரு கார ணத்தால் பால் வற்றிவிட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள்  இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மரு த்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான உணவு

புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெ னில் நிலம் வளமாக இரு ந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். என வே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச் சத்துள் ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்று க்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத் தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்ட வைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவு கள், வெள்ளைப் பூண்டு ஆகியவ ற்றை அதிகம் உட்கொள்ள வே ண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள் ளவேண்டும் என்கின்றனர் மருத் துவர்கள். இதன்மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என். ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

முறையான மாதவிடாய் காலம்

முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்த லை தாமதப்படுத்தும் எனவே இக்குறை பாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோ சனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாத வி டாய் பருவமாகும். மாத விடாய் ஆரம்பிக் கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உரு வாகும் என்கின்றனர் மருத்துவர்கள். என வே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.

மது, புகை கூடாது

மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்க வே ண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வா ய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து ள்ளனர்.

தாயாக சிறந்த பருவம்

உலகளவில் புள்ளி விவரக் கண க்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த கால கட்டமாகக் கருதப்படுகிறது. 20 க்கு குறைந்தோ அல்லது முப்ப துக்கு மேற்பட்டோ குழந்தைக ளைப் பெற்றுக் கொள்வது தாயி ன் உடல் ரீதியாகவும், குழந்தை யின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டி ருக்கி றோம்.

பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழ ந்தை வெளிவருவதற்கு சுலப மாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந் த பெண்களுக்குப் பிறக்கும் குழந் தைகளுக்கு உடல் ரீதியான பாதி ப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்து வக் குறிப்புகள் சொல்கின்றன

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப் புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள்  முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப் போது அதிகரித்துள் ளன.

நோயற்று இருங்கள்

கர்ப்பம் தரித்தபின்னர் இய ற்கையான எந்த உணவுக ளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாய னங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர் த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவ தால் கர்ப்பத்திற்கு எந் தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப் படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்கு வது நல்லது

இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத் துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத் திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்த வொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெற வேண் டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ் த்மா, ரத்த க்கொதிப்பு போன்ற நோய்கள் இரு ப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உரு வா க்க முடியும்.

Post a Comment

0 Comments