மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா... கூடாதா? மருத்துவர்கள் விளக்கம்!
மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபடலாமா, கூடாதா என்பது எல்லோருக்கும் முன் நிற்கும் கேள்வி. இதுகுறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவா என முகம் சுழித்தபடி கேள்வி எழலாம். அது பெண்களுக்கும் சற்று சங்கடமாக இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்வதால் வழக்கத்தைக் காட்டிலும் அதிக திருப்தி ஏற்படுவதாக சொல்கிறார்கள். இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கீதா, ” அந்தக் காலங்களில் உறவில் ஈடுபடுவது, இருவருடைய விருப்பத்தைப் பொருத்தது. ஆனாலும் இருவருடைய உடல் சுகாதாரம் கருதி உடலுறவு மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது “ என்கிறார்.
இதைத்தொடர்ந்து மற்றொறு மகப்பேறு மருத்துவரான மனுலஷ்மியிடம் கேட்டபோது, ” மாதவிடாய் காலங்களில் உடலுறவு மேற்கொள்ளலாம். ஆனால் அது இருவரின் விருப்பத்தைப் பொருத்தது. பெண்ணின் உடல் சவுகரியத்தைப் பொருத்தது. அப்படி உடலுறவு மேற்கொள்வதானால் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாதவிடாய் காலங்களில் உடலுறவு மேற்கொள்வதால் இரத்தப்போக்கை சீராக்குகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய தலைவலியும் நீங்குகிறது என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதைகளே. அந்தக் காலங்களில் உடலுறவு மேற்கொள்வதால் நன்மை பயக்கும் என்று இதுவரை எந்த ஆய்வு முடிவும் கூறவில்லை’’ என்கிறார் மனுலஷ்மி.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பாலியல் உணர்வு அதிகமாக இருக்கும். இந்த உணர்வு மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஏற்படும்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்வதானால் உங்கள் துணையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். துணையின் சம்மதம் இதில் மிக முக்கியம்.
மாதவிடாயின் போது மேற்கொள்ளப்படும் உடலுறவை செயற்கை மழையில் நனைந்த படி ஷவரில் மேற்கொள்ளலாம். அது இன்னும் சவுகரியமாக இருக்கும்.
மெத்தையில் மேற்கொள்வதானால் மெத்தையின் மேல் ஏதேனும் துணி அல்லது ரப்பர் ஷீட் விரிப்புகளை பயன்படுத்துங்கள் அல்லது மெத்தையைப் பயன்படுத்தாமல் தரையில் மேற்கொள்ளலாம்.
மாதவிடாய் கால உடலுறவால், கருத்தரிப்பதைத் தடுக்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
செக்ஸ் பொசிஷன்களை கையாளும்போது, உங்கள் மனைவிக்கு சவுகரியமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவருக்கு வலி ஏற்படுவதாக இருந்தால் தவிர்த்துவிடுவது நல்லது

0 Comments
YOUR COMMENT THANKYOU