Subscribe Us

header ads

பெண்களின்_கருப்பை_மற்றும் #சினைப்பையை_நீக்குவதால்……

🇨🇭#பெண்களின்_கருப்பை_மற்றும் #சினைப்பையை_நீக்குவதால்……

❓#ஏற்படும்_பிரச்சனைகள்❓❓

❓#பக்கவிளைவுகள்_என்ன❓❓❓

⭐ கர்ப்பப்பை பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு உறுப்பு. குழந்தைபேறை தரும் மகத்துவமான உறுப்பு. இதை வாழும் காலம் வரை உரிய பாதுகாப்போடு பராமரிக்க வேண்டும். இதை கவனிக்க தவறும்போது கட்டிகள் தொடங்கி புற்றுநோய் வரையான பிரச்சனைகளில் கொண்டு விடும்.

தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். 

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப்பையில் இருந்து மாதம் ஒருமுட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப்பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை 
வலுப்படுத்துகிறது. 

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப்பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். 

மாதந்தோறும் உண்டாகும் உதிரப்போக்கின் போது உடலில் இருக்கும் கால்சியம் சத்தும் வெளியேறுகிறது. அதனால் தான் இயல்பாகவே பெண்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

👉பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. 

மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

கருப்பையில் இருக்கிற ஹார்மோன்கள்தான், நம் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் அத்தியாவசிய சத்துகளை டெபாசிட் செய்து வைக்கும். 

🚺 கருப்பையில் பிரச்சனை -1 🚺

அடிக்கடி பிரசவிக்கும் பெண்களுக்கு கருப்பை, பெண் உறுப்பு அதை சுற்றியிருக்கும் தசை நார்கள் தளர்ச்சியடைகிறது. இந்த பலவீனத்தை உரிய முறையில் சரி செய்யாத போதும். இயல்பாகவே பலவீனமாக இருக்கும் பெண்கள் மேலும் மேலும் பலவீனத்தை உணரும் போது கருப்பை அதன் இடத்திலிருந்து கீழே இறங்குகிறது. இது கருப்பை கீழிறக்கம் என்று அழைக்கிறார்கள்.

இன்று இளம்பெண்களுக்கும் கருப்பையில் நீர்க்கட்டிகள், சினைப்பையில் கட்டிகள் உண்டாகிறது. இந்த ஃபைப்ராய்டு கட்டிகள் மெனோபாஸ் காலத்துக்கு பிறகு குறைந்துவிடும் என்றாலும் இவை கருப்பையின் வெளிப்பகுதியில், கருப்பையின் உள்சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில், கருப் பையின் உள்சுவர் பகுதியில் என்று மூன்று இடங்களில் ஓரிடத்தில் உண்டாகும். இதில் மூன்றாவது இடத்தில் உண்டாகும் கட்டிகளில் அதிகளவு உதிரப்போக்கு, குழந்தைபேறு பிரச்சனை உண்டாகும் என்றாலும் முறையான மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை எடுத்துகொள்ளலாம்.

🚺​ கருப்பை பிரச்சனை- 2 🚺

கருப்பையில் அதிக எடையுடன் பெரிய கட்டிகள் இருக்கும் போது கருப்பையை அகற்ற வேண்டிய நிலை உண்டாகலாம். வெகு சில மிக குறைந்த எண்ணிக்கையில் இளம்பெண்கள் கருப்பையில் அதிக எடையுடன் கூடிய கட்டியை கொண்டிருப்பார்கள். மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகு அவை சிகிச்சையால் குணப்படுத்தமுடியாத நிலைக்கு வரும் போது மட்டுமே கருப்பையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் மருத்துவர்கள். இவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் ஒரு 
சிலரே என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

அதே போன்று வெகு சில பெண்களுக்கு பிரசவம் முடிந்த பிறகும் அதிகப்படியான இரத்தபோக்கு தொடர்ந்து இருக்கும். மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பிறகும் அவை தொடரும் பட்சத்தில் மருத்துவர்களே கருப்பையை அகற்ற அறிவுறுத்துவார்கள். இவையும் ஒரு சில பெண்களுக்கு மட்டுமே உண்டாகும் என்பதும் குறிப்பிடதக்கது.

⭕ ​கருப்பை அகற்றம் யாருக்கு❓

கருப்பையில் கட்டிகள் இருப்பது உறுதியானாலே கருப்பை அகற்றிவிடுவார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அடிவயிறு வலி இருந்துபரிசோதனை செய்யும் போது கருப்பை தொற்று இருந்தாலும் அவர்களும் கருப்பையை அகற்ற வேண்டும் தானாகவே முடிவு செய்து மருத்துவரை அணுக பயப்படுவார்கள். அவர்களுக்கும் அது அவசியமல்ல.

சிலர் வழக்கமாக கருப்பைவாய் பரிசோதனையின் போது பாப்ஸ்மியர் பரிசோதனையில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தால் மருத்துவரே கருப்பையை எடுப்பது நல்லது என்று அறிவுறுத்துவார். சிலருக்கு கருப்பை கட்டியானது கர்ப்பப்பையின் வெளியே இல்லாமல் உள்ளே இருந்தால் அவர்களுக்கு………

👉அதிக அளவு உதிரபோக்கு
கட்டியாக வெளியேறுவது, 

👉கடுமையான வயிற்றுவலி 

போன்றவை இருக்கும். இதில் கட்டியின் அளவு குறைந்து தான் இருக்கும். ஆனாலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். 

உதாரணத்துக்கு கருப்பை வெளியே 20 செமீ அளவுக்கு கட்டிகள் இருந்தாலும் இந்த பிரச்சனை உண்டாகாது. ஆனால் கருப்பை உள்ளே கட்டி 2 செமீ அளவு கட்டி இருந்தாலும் அதிக பிரச்சனைகளை உண்டாக்கும். 

[ கருப்பையில் உயிரைகொல்லும் புற்றுநோய் , சர்விகல் கேன்சர் வருவதற்கான அறிகுறி 
தென்பட்டாலும் கருப்பையை அகற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.]

⭕ ​கருப்பையை எடுத்து விடுவதால், ஹார்மோன்கள் திடீரெனக் குறையும். 

👉இதனால், அதுநாள் வரை ஹார்மோன்கள் பிடித்து வைத்த அத்தியாவசிய சத்துகளும் நம் உடலிலிருந்து மள மளவெனக் குறைய ஆரம்பிக்கும். 

👉சத்துகள் குறைவதால், எலும்பு பலவீனம் வருவதற்கும், ஏற்கெனவே எலும்புகள் பலவீனமாக இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாகவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. 
அதனால் தான்……

◀மூட்டுவலி, 

◀உடல் வலி, 

◀உடல் சோர்வு 

என்று பெண்கள் பாடாய்படுவார்கள். 
.

🔴 கருப்பை மற்றும் சினைப்பையை நீக்குவதால்………

👉#ஏற்படும_பாதிப்புகள்❓❗

▶உடல்சூடு, 

▶இரவில் அதிகம் வியர்த்தல், 

▶தூக்கமின்மை, 

▶அடிக்கடி கோபம், 

▶சலிப்பு, 

▶மறதி, 

▶மனஉளைச்சல், 

▶ உடம்பு வலுவிழந்து விடும். 

▶உடல் வலி 

▶சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். 

▶உடலுறவில் பிரச்சனை ஏற்படும். 

▶எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் 
மற்றும் எலும்புகள் பலவீனமாகி ஆஸ்டியோபோராசிஸ்
தொந்தரவுகளும் வரும். 

▶ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் 

▶மார்பக புற்றுநோய் 

போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

கருப்பைபை நீக்கிக் கொண்ட பெண்களுக்கு ஏற்கெனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை இருந்திருந்தால், அவை இந்த நேரத்தில் இன்னும் அதிகமாகும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும் போது சினை 
முட்டைப்பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப்பையும் இயங்காது.  

▶கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், 

▶கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், 

▶மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல்,

▶அதிகமாக உதிரம் போதல், 

▶வலி 

▶சிறிய கட்டிகள் 

▶வெள்ளைப்படுதல் 

ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். 
இது போன்ற பிரச்சனைகளுக்கு மாற்று வழிகள் மற்றும் மாற்றுவைத்தியம் 100% இருக்கிறது அதை கடைபிடிக்கலாம். 

🔴 கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்சனைகளும் இருக்கும்.

கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Post a Comment

0 Comments