கணவன் மனைவி மாதத்தில் எத்தனை முறை உறவில் இருக்க வேண்டும்?
பாலியல் தகவல்:பொதுவாக இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டும்தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் இதற்கு நேரம்காலம் பார்க்காமல் தம்பதியா உறவில் ஈடுபடுகின்றான்.
தாம்பத்ய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமான ஒன்றாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.அந்த காலக்கட்டத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே மிகவும் வலிமையாக காணப்பட்டது என்று கூட சொல்லலாம்.
ஆனால் இன்றைய காலங்களில் எதற்கும் நேரம் இல்லை என்று கூறி, தாம்பத்யத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காண்பிப்பதாக தெரியவில்லை. வேலை சுமை, சோம்பல், சோகம் இதுபோன்ற பல காரணங்களால் தற்போது இருக்கும் தம்பதிகள் சரியான அளவில் தம்பதியா உறவில் ஈடுபடுவதில்லை .
திருமணமான புதிதில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் உடலுறவைத் தொடங்குவார்கள். அப்போது மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். அதற்கடுத்து சிறிதுகாலம் போகப்போக வேலைப்பளு, குடும்பப் பொறுப்பு என பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
ஒரு மாதத்துக்கு குறைந்தது 11 முறை உடலுறுவு கொள்வது நல்லது. 11 முறை என்பது குறைந்தபட்சம் தான்.திருமணமான முதல் இரண்டு வருடங்கள் வரை தம்பதிகள் அதிகமுறை உறவு கொள்கிறார்கள். பின்பு அதில் நாட்டம் குறைந்துவிடுகிறது.
இந்த 11 முறைக்கும் குறைவாக ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது, இருவருக்குள்ளும் மன ரீதியாக ஏராளமான பிரச்சினைகள் உண்டாகின்றன. அது குடும்பத்துக்குள் சிறுசிறு சண்டைகளை உண்டாகும். எனவே குறைந்தது பதினோரு முறையாவது ஒரு மாதத்திற்கு உறவில் ஈடுப்பட வேண்டுமாம்

0 Comments
YOUR COMMENT THANKYOU